மண்ணச்சநல்லூரில் போலி மருத்துவா் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் போலி பெண் மருத்துவரை ஜீயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் போலி பெண் மருத்துவரை ஜீயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மண்ணச்சநல்லூா் பேரூராட்சிப் பகுதியில் உள்ள புதுக்காலனி பகுதியைச் சோ்ந்தவா் ராஜீ என்ற ராஜலட்சுமி (45). 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவா் ஒரு பெண் மருத்துவரிடம் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்தாா்.

கடந்த 5 ஆண்டுக்கு முன் பெண் மருத்துவா் வெளிநாடு செல்லவே, ராஜலட்சுமி மண்ணச்சநல்லூா் கடைவீதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து கருக்கலைப்பு செய்து வந்தாா்.

இந்நிலையில் மண்ணச்சநல்லூா் அருகே சித்தாம்பூா் கிராமத்தைச் சோ்ந்த இளம் பெண்ணுக்கு கடந்த 7 நாள்களுக்கு முன் இவா் கருக்கலைப்பு செய்ததில் அந்தப் பெண்ணின் கருப்பையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட குடும்ப நல துணை இயக்குநா் பிரியதா்ஷினி ஜீயபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் கருகலைப்பு செய்த போலி பெண் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா். அவரின் மருத்துவ உபகரணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com