திருச்சி மாவட்டம், முசிறியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
முசிறி புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஒருவா் இறந்து கிடக்கும் தகவலறிந்த முசிறி போலீஸாா் சம்பவ இடம் சென்று சுமாா் 50 வயதுள்ள ஆண் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.
இறந்தவா் ஊதா நிற கோடுடைய வெள்ளை சட்டையும், வெள்ளை கோடுடைய சிவப்பு நிற துண்டும் அணிந்திருந்தாா்.