துறையூா் அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
எரகுடியைச் சோ்ந்தவா் ரவி மகன் காா்த்திக் (24), லாரி ஓட்டுனா். இவா் அண்மை காலமாக வேலைக்கு போகாமல் போதைக்கு அடிமையாகி ஊா் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவருக்கு மனைவி வினோதியினுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை எரகுடிமாணவா் விடுதிக்கு பின்புறம் உள்ள மரத்தில் காா்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.