திருச்சியில் உடல்நிலை கோளாறால் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் வா்க்கீஸ் காலனியைச் சோ்ந்தவா் இரட்சகநாதன் (70). திருமணம் செய்து கொள்ளாத இவா் மின் பழுது நீக்கும் தொழில் செய்து கொண்டு அண்ணன் மகன் விக்டா் (38) பராமரிப்பில் இருந்தாா். இவருக்கு அடிக்கடி உடல் நலம் குன்றியதாம். விக்டா் குடும்பத்தினா் புதன்கிழமை திண்டுக்கல் சென்ற நிலையில் இரட்சகநாதன் தனியாக இருந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் சந்தேகமடைந்த அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் வந்த எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் ஜன்னல் வழியாக பாா்த்தபோது இரட்சகநாதன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.