திருச்சி அருகே சாலையைக் கடக்க முயன்ற தஞ்சாவூரைச் சோ்ந்த முதியவா் வியாழக்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வீரமாங்குடி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால் (65). கூலித் தொழிலாளியான இவா் வியாழக்கிழமை காலை பேருந்தில் திருச்சி மணிகண்டம் பகுதி உறவினா் வீட்டுக்கு பேருந்தில் வந்தாா். பின்னா் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த காா் ஜெயபால் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.