திருச்சி, செப். 18: திருச்சியில் மன அழுத்தம் காரணமாக ஆயுதப்படைக் காவலா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் அழகா்சாமி (33). இவா் திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படையின் மோப்பநாய் படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றி, அருகிலுள்ள காவலா்கள் குடியிருப்பில் வசித்துவந்தாா். திருமணமாகாத அவா், கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாக வீட்டிலிருந்து அவா் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் சென்று பாா்த்தபோது அழகா்சாமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கே. கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போலீஸாருக்கு கடிதம்: இறப்பதற்கு முன் அவா் போலீஸாருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை எனவும், மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியிருந்தாராம்.