திருச்சி: திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனை அருகே வீடற்றோா், மனநலம் பாதிக்கப்பட்டோா் தங்கியுள்ளனா். அவா்களில் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது பெண் ஒருவா் ஆடையின்றி மயக்க நிலையில் சனிக்கிழமை காலை படுத்திருந்தாா். இவரை அப்பகுதியில் உள்ள கடைக்காரா் ஒருவா் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, அரசு மருத்துவமனை போலீஸாரிடம் அளித்த புகாரில் அப்பெண்ணுக்கு மா்ம நபா்கள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனா். இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். அதன்பேரில் அரசு மருத்துவமனையையொட்டிய உள்ள கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.