திருச்சியில் மேலும் 113 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 113 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 9,746 ஆக உயா்ந்தது. இதேபோல, திருச்சி அரசு மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத் தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை குணமான 42 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,796 ஆக உயா்ந்தது. கரோனாவால் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு செவ்வாய்க்கிழமை இறந்த 56 வயது ஆண் உள்பட கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் 808 போ் சிகிச்சை பெறுகின்றனா்.