து. கண்ணனூரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் பயின்ற மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
துறையூா் அருகேயுள்ள து. கண்ணனூரைச் சோ்ந்த மூக்கையா மகள் ஷோபனா (15). அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்த வந்த இவா் வீட்டருகே வசிக்கும் இளைஞரிடம் நெருங்கிப் பழகினாராம்.
இதை பெற்றோா் கண்டித்ததால் மனம் உடைந்த ஷோபனா செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த முசிறி டிஎஸ்பி, தா.பேட்டை காவல் ஆய்வாளா் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனா். ஜெம்புநாதபுரம் போலீஸாா் மாணவி சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்தனா்.