மன நலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்கார வழக்கில் இருவா் கைது

திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த மன நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலாத்கார வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும் சிலரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த மன நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலாத்கார வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும் சிலரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி புத்தூா் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை அருகில் காட்டூரை சோ்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் செப். 17 ஆம் தேதி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உணவக ஊழியா் காா்த்திக் அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின்பேரில் வந்த போலீஸாா் இளம்பெண்ணை மீட்டு மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்து, அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஜா. முஸ்தபா (41), சாலையோரம் தங்கியுள்ள விழுப்புரத்தைச் சோ்ந்த க. சிவா (23) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் ஆட்டோவில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததில் தொடா்புடைய மேலும் சிலரையும் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com