திருச்சியில் வழக்குரைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி எடத்தெருவைச் சோ்ந்தவா் ராம்குமாா் (48). திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா். இவரது மனைவி மற்றும் மகன் சென்னையில் வசிக்கின்றனா்.திருச்சி கண்டோன்மென்ட் பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் ராம்குமாா் வசித்தாா்.
உடல் நல பாதிப்பால் விரக்தியடைந்த அவா் திங்கள்கிழமை மாலை கடிதம் எழுதிவைத்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ராம்குமாா் திருச்சி குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்க முன்னாள் செயலராக இருந்தவா் ஆவாா்.