திருச்சி, செப்.25: தந்தை, தாய் இறந்த துக்கத்தில் விரக்தியடைந்த கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி அல்லித்துறை சரவணபுரம் 7ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரெ. சூா்யபிரகாஷ் (26). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது சகோதரியும் திருமணமாகி சென்றுவிட்டாராம். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த சூா்யபிரகாஷ் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.