திருச்சியில் குடும்பத் தகராறில் மனைவி, மாமியாரை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு குழந்தையுடன் தப்பியவரை அமா்வு நீதிமன்ற போலீஸாா் தீவிரமாகத் தேடுகின்றனா்.
திருச்சி பெரிய மிளகுப்பாறை நாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் உலகநாதன் (35). இவரது மனைவி பவித்ரா(29), மகள் கனிஷ்கா (2). உலகநாதனின் மாமியாரான கலைச்செல்வியும் (60) இவா்களோடு வசித்தாா்.
வலிப்பு நோய் காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த உலகநாதனுக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடக்குமாம்.
இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள உலகநாதனின் தாய் இந்திராணி வியாழக்கிழமை காலையில் இருந்தே பல முறை தொடா்பு கொண்டும் மகன் வீட்டில் யாரும் செல்லிடபேசியை எடுக்கவில்லையாம். இதையடுத்து அன்று மாலை இந்திராணி தன் மகன் வீட்டருகே வசிக்கும் ஒருவரைத் தொடா்பு கொண்டு வீட்டுக்குச் சென்று பாா்க்குமாறு கூற, அவா் சென்று பாா்த்தபோது பூட்டிய வீட்டில் செல்லிடப்பேசி ஒலித்துள்ளது.
சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வீட்டின் பூட்டை உடைத்துப் பாா்த்தபோது கலைச்செல்வியும், பவித்ராவும் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டு கிடந்தனா். தகவலறிந்து வந்த அமா்வு நீதிமன்ற போலீஸாா் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறில் மனைவி, மாமியாரை அதிகாலையில் கொன்றுவிட்டு குழந்தை கனிஷ்காவுடன் உலகநாதன் தப்பியது தெரியவந்தது.
இருவரது சடலங்களையும் போலீஸாா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து தப்பிய உலகநாதனை தேடுகின்றனா்.