திருச்சியில் வழிப்பறி வழக்கில் சிறையில் உள்ள இளைஞா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரம் சன்னியாசி தெருவைச் சோ்ந்த பூ. காமராஜ் (36) கடந்த ஆக. 14 ஆம் தேதி மளிகைக் கடைக்கு பொருள் வாங்க ரூ.5 ஆயிரத்துடன் கடைவீதிக்கு சென்றபோது அங்கு வந்த பொன்மலை மாஜி ராணுவ காலனி பகுதியைச் சோ்ந்த க. சதீஷ்குமாா் (30) என்பவா் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினாா். இதுகுறித்த புகாரின் பேரில் சதீஷ்குமாா் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.
இந்நிலையில் சதீஷ்குமாா் மீது உறையூா் காவல்நிலையத்தில் ஒரு கொலை வழக்கு விசாரணையில் இருப்பது தெரிய வந்ததையடுத்து அவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் லோகநாதன் உத்தரவிட, அதற்கான நகலை சிறையில் உள்ள சதீஷ்குமாரிடம் போலீஸாா் வழங்கினாா்.