சமயபுரம் அருகே விபத்துக்குள்ளான காா் தீக்கிரை

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான காா் தீக்கிரையானது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான காா் தீக்கிரையானது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியிலிருந்து காரில் பாஸ்கா், லாா்வின் உள்ளிட்ட 5 போ் திருச்சி வழியாக மதுரைக்குச் சென்று கொண்டிருந்தனா். சமயபுரம் அருகே இருங்களூா் பகுதியைக் கடக்க முயன்றபோது சாலைத் தடுப்புச் சுவரில் காா் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் காயமடைந்து இருங்களூா் பகுதி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்நிலையில் சாலையில் கவிழ்ந்து கிடந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த சமயபுரம் தீயணைப்பு படையினா் தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com