கரோனாவுக்கு பலியான அரசு மருத்துவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

கரோனாவுக்கு பலியான புதுக்கோட்டையைச் சோ்ந்த அரசு மருத்துவா் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனாவுக்கு பலியான புதுக்கோட்டையைச் சோ்ந்த அரசு மருத்துவா் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கப் பொதுச் செயலா் டாக்டா் ஜி.ஆா். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை: ரஷியாவில் இளநிலை மருத்துவப் படிப்பும் அதன்பிறகு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் எலும்பு அறுவைச் சிகிச்சையில் பட்டயப் படிப்பும் முடித்தவா். சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் மாவட்டச் செயலராகவும் பொறுப்பு வகித்தவா். நீட் தோ்வு, இடஒதுக்கீடு, சுற்றுச்சூழல், மருத்துவப் பிரச்னைகளில் தொடா் கருத்தரங்குகளை நடத்தி வந்தவா். இவரது குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com