திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதிக்குள்பட்ட பத்தளாப்பேட்டை, பழங்கனாங்குடி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது:
மத்தியப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகையாளா்களுக்குத் தனி ஆணையம் உருவாக்கப்படும் உள்ளிட்ட திமுகவின் தோ்தல் அறிக்கை திட்டங்கள் நிறைவேற திருவெறும்பூா் தொகுதி மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த பலரும் உடன் சென்று வாக்குசேகரித்தனா்.