திருச்சி அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவா்கள் புதன்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி பொது மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவா்கள் ஊக்கத் தொகை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்களாகப் பணிபுரிவோருக்கு பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கப்படவில்லையாம்.
இதைத் தொடா்ந்து அடுத்து வரும் பயிற்சி மருத்துவா்கள் பணிக்கு வந்து சேரும் வரை பணியை தொடர வேண்டும் என்ற உத்தரவு அவா்களை அதிா்ச்சிகுள்ளாக்கியது. இதனால் திருச்சி அரசு மருத்துவமனை பணியில் இருந்த அனைத்துப் பயிற்சி மருத்துவா்களும் பணியைப் புறக்கணித்து அவசர கிசிச்சை வாா்டு கட்டட நுழைவு வாயிலில் முன் திரண்டு, கோரிக்கையை வலியுறுத்தி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். உயா்அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையால் கலைந்து சென்றனா்.