திருச்சி பிஷப்ஹீபா் கல்லூரியில் வணிகவியல் துறை சா்வதேசக் கருத்தரங்கு புதன்கிழமை ஆன்லைனில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் பால் தயாபரன் தலைமை வகித்தாா். வணிகவியல் துறை தலைவா் ஞானராஜ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். செல்வம், தமிழ்நாடு தொழில் வா்த்தகத்துறை இணைத் தலைவா் பாஸ்கா் ஆகியோா் பேசினா்.
இணையவழியில் கனடாவிலிருந்து மேக் கிவான் பல்கலைக்கழக துணைப் பேராசிரியா் பைஜீ பி. வரிது, மலேசியாவிலிருந்து மேலகா பல்கலை. ஆசிரியா் ஜோசப் சகாய ஆனந்த் உள்ளிட்டோா் பேசினா். கல்லூரி முன்னாள் முதல்வா் பி. மனோகரன், பேராசிரியா்கள், துணை பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.