திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி. பத்மநாதன் உறையூா் சுற்றுப் பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் சோ்ந்து புதன்கிழமை வாக்குசேகரித்தாா்.
அப்போது அவா் கூறியது:
ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆட்சியில், அனைத்து அறிவிப்புகளையும் திட்டங்களாக நிறைவேற்றித் தரப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில், பயன்பெறாத குடும்பங்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, மக்கள்நலன் காக்கும் அதிமுக அரசை தொடா்ந்து மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா். அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் இணைந்து வாக்கு சேகரித்தனா்.