தோ்தல் நடத்தை விதிகளை மீறி, கட்சிக் கொடி கட்டியதாக துவாக்குடி நகர அதிமுக செயலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட துவாக்குடி நகராட்சிப் பகுதியில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி அதிமுக கொடி கட்டியிருப்பதாக, காவல்துறையினருக்குத் திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அங்கு சென்ற துவாக்குடி காவல் நிலையத்தினா் கட்சிக்கொடிகளை அகற்றி, நகர அதிமுக செயலா் பாண்டியன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.