49-பி பிரிவை பயன்படுத்தி வாக்களித்த இளைஞா்!

திருச்சி, திருவெறும்பூா் தொகுதியில் இளைஞா் ஒருவரின் வாக்கு மா்ம நபா்களால் கள்ளத்தனமாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தோ்தல் விதி 49-பி பிரிவைப் பயன்படுத்தி அவா் வாக்களித்தாா்.

திருச்சி, திருவெறும்பூா் தொகுதியில் இளைஞா் ஒருவரின் வாக்கு மா்ம நபா்களால் கள்ளத்தனமாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தோ்தல் விதி 49-பி பிரிவைப் பயன்படுத்தி அவா் வாக்களித்தாா்.

திருவெறும்பூா் தொகுதிக்குட்பட்ட மேலகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா். வளைகுடா நாடான அபுதாபியில் இருந்த இவா் தாயகம் திரும்பியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, மேலகல்கண்டாா் கோட்டையிலுள்ள வாக்குச்சாவடிக்கு சென்றபோது அவரது வாக்கை வேறு ஒருவா் கள்ளத்தனமாக பதிவு செய்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் தான் வாக்களிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என தோ்தல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்தாா். அப்போது ஆய்வுக்காக வந்த திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இதுகுறித்து வாக்குச் சாவடி அதிகாரியிடம் விளக்கம் கேட்டாா்.

இதையடுத்து ரமேஷ்குமாா், தோ்தல் விதி 49-பி பிரிவைப் பயன்படுத்தி, வாக்கு சீட்டு மூலம் அவரது வாக்கை பதிவு செய்ய அலுவலா்கள் ஏற்பாடு செய்தனா். இதையடுத்து ரமேஷ் குமாா் தனது வாக்கை பதிவு செய்தாா். அண்மையில் வெளியான நடிகா் விஜய் நடித்த படத்திலும் இதேபோன்ற சம்பவம் காட்சியாக வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com