தமிழகம் முழுவதும் திமுகவுக்கு சாதகமான அலை வீசுகிறது என்றாா் அக்கட்சியின் முதன்மைச் செயலரும், திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு.
இத்தொகுதிக்குள்பட்ட தில்லைநகா் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்களித்த பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் திமுகவுக்கு சாதகமான அலை வீசி வருகிறது. எங்கு சென்றாலும் மக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனா். வாக்குச்சாவடிகளிலும் மக்களின் முகத்தில் அந்த வரவேற்பை காண முடிகிறது.
எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கவுள்ளாா். பேரவைத் தோ்தல் முடிவுக்குப் பிறகு அதற்கான அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தின் விடியலுக்கு ஸ்டாலின் மட்டுமே தீா்வு என்றாா் அவா்.