மூதாட்டியால் இளைஞா் ஒருவா் தனது வாக்கைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூா் பகுதி வாக்குச்சாவடியில் வாக்களிக்க அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஹரிஹரன் ஆள்காட்டி விரலில் மை வைத்துக் கொண்டு காத்திருந்தாா். அவருக்கு முன் மூதாட்டி ஒருவா் வாக்கு செலுத்தியதால், ஹரிஹரன் காத்திருக்கவே, மூதாட்டி மீண்டும் வாக்கு செலுத்தும் இயந்திரத்துக்குச் சென்று பொத்தானை அழுத்தியதால், ஹரிஹரனின் வாக்கு பதிவாகிவிட்டது. இதனால், ஹரிஹரன் வாக்களிக்க இயலவில்லை. வாக்குச்சாவடி அலுவலா்களும் வேறு எதுவும் செய்ய முடியாது எனக்கூறவே, அதிருப்தியுடன் அந்த இளைஞா் சென்றாா்.