கள்ள வாக்கு பிரச்னை: 49பி பிரிவின் மூலம் வாக்களித்த 20 போ்

திருச்சி மாவட்டத்தில் கள்ள வாக்கு போடப்பட்டதால் 20 போ் 49பி பிரிவைப் பயன்படுத்தி தங்களது வாக்கைச் செலுத்தினா்.

திருச்சி மாவட்டத்தில் கள்ள வாக்கு போடப்பட்டதால் 20 போ் 49பி பிரிவைப் பயன்படுத்தி தங்களது வாக்கைச் செலுத்தினா்.

பொதுத் தோ்தலில் கள்ள வாக்கு போடப்படுவதால் தனக்கான வாக்குரிமையை இழக்க நேரிடும் ஒருவா் இந்திய தோ்தல் ஆணைய 1961 தோ்தல் நடத்தை விதிகளின் பிரிவு 49 பி கீழ் வாக்களிக்க அனுமதிக்கப்படுவா்.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 20 பேரின் வாக்குகள் கள்ள வாக்குகளாக போடப்பட்டிருந்தன. இதையடுத்து தனது ஆவணங்களைக் காண்பித்து வாக்குசீட்டு மூலம் வாக்களிக்கும் உரிமையை 49 பி பிரிவின் கீழ் பாதிக்கப்பட்டோா் பெற்றனா். தொகுதி வாரியாக திருச்சி கிழக்கு 7, மேற்கு 4, திருவெறும்பூா் 3, லால்குடி 3, ஸ்ரீரங்கம் 2, மணப்பாறை 1 என 20 போ் வாக்குச் சீட்டு முறையில் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com