திருச்சியில் கரோனா தொற்றால் மேலும் ஒருவா் இறந்தாா்.
தமிழக சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட பரிசோதனை முடிவில் திருச்சி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 938 ஆகவும், மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,568 ஆகவும், குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 15,442 ஆகவும் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்.3 ஆம் தேதி கரோனா உறுதியான 58 வயதுள்ள நபா் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதன்மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 188 ஆக உயா்ந்தது.