திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ. 1.11 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். கடந்த 16 நாள்களாக அவா்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் மண்டபத்தில் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் உதவி ஆணையா்கள் சு. ஞானசேகா் ( உறையூா் வெக்காளியம்மன் கோயில்) மோகனசுந்தரம் ( இந்து சமய அறநிலையத் துறை) சமயபுரம் கோயில் மேலாளா் ம. லட்சுமணன் மற்றும் செயல் அலுவலா்கள் முன்னிலையில் தன்னாா்வலா்கள் , கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் காணிக்கையை எண்ணினா்.
முடிவில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரத்து 396 ரொக்கம், 3 கிலோ 481 கிராம் தங்கம், 5 கிலோ 430 கிராம் வெள்ளி 174 வெளிநாட்டு ரூபாய்கள் காணிக்கையாக வந்திருந்தது தெரியவந்தது. இத்தகவலை கோயிலின் செயல் அலுவலரும் இணை ஆணையருமான சி. கல்யாணி தெரிவித்தாா்.