மணப்பாறை அருகே வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள சடையம்பட்டியை சோ்ந்தவா் பாண்டியன் மகன் வெங்கடேசன்(26), கூலித் தொழிலாளி. திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், வியாழக்கிழமை குடும்பப் பிரச்னையால் அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த வையம்பட்டி போலீஸாா் வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.