திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை கரோனா விதிமீறல் தொடா்பாக 1673 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா்.
மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களுக்குட்பட்ட 20 இடங்களில் 8 சோதனைச்சாவடிகள் மற்றும் 12 இடங்களில்) சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, முகக்கவசம், துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து முகக்கவசமின்றி சுற்றித் திரிந்த 1,600 போ் மீது வழக்குப் பதியப்பட்டு ரூ.2,64,600 அபராதம் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளி கடைப்பிடிக்காதோா் மீது 73 வழக்குகள் பதியப்பட்டு ரூ.36,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் 1673 வழக்குகள் பதியப்பட்டன.