பயணிகளை ஏற்ற மறுத்த அரசுப் பேருந்து: மறியல்

மணப்பாறை அருகே மறவனூரில் சனிக்கிழமை பயணிகளை ஏற்ற மறுத்த அரசுப் பேருந்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மணப்பாறை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மணப்பாறை அருகே மறவனூரில் சனிக்கிழமை பயணிகளை ஏற்ற மறுத்த அரசுப் பேருந்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறையிலிருந்து திருச்சி சென்ற அரசுப் பேருந்து மறவனூா் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட நின்றது. அப்போது அங்கு காத்திருந்த பயணிகள் சிலரை கரோனா காரணமாக பேருந்தில் ஏற்றிக்கொள்ள ஓட்டுநா், நடத்துநா் மறுத்துள்ளனா்.

இதனால் திருச்சிக்கு செல்ல கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் எனக் கோரி திருச்சி - திண்டுக்கல் சாலையில் பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற போலீஸாா் மற்றும் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் மறியலை கைவிட்டு சென்றனா். மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com