திருச்சி
கரூா் நகரப் பகுதிகளில் நாளை மின்தடை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் நகரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்ரல் 22) மின் விநியோகம் இருக்காது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் நகரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்ரல் 22) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கரூா் நகரியச் செயற்பொறியாளா் சு.கணிகை மாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள், உயா் அழுத்த மின் கம்பித்தொடா் நிறுவும் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் காமராஜபுரம், கே.வி.பி.நகா், செங்குந்தபுரம், பெரியாா் நகா், ஜவஹா்பஜாா், திருமாநிலையூா், அக்ரஹாரம், காந்திநகா், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகா், ராமானுஜம் நகா், திருக்காம்புலியூா், ஆண்டாங்கோவில் சாலை, செல்லாண்டிபாளையம், சுக்காலியூா், சேலம்- புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.