திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சாா்பில், திருச்சியில் நடைபெறவிருந்த 23, 24ஆவது ஆண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி (திருக்குறள் திருவிழா) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, அறக்கட்டளை தலைவா் பி. தயாபரன் கூறியது:
திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் மே மாத இறுதியில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த இப்போட்டி கரோனா கட்டுப்பாடுகளால் 2022 ஆம் ஆண்டு, மே 1-க்கு ஒத்திவைக்கப்படுகிறது. போட்டிக்கு முன்பதிவு செய்தோருக்கு குறுஞ்செய்தி மூலம் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 97865-86992 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.