திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மருதூா் கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை காலை உணவைத்தேடி வந்த 2 வயது ஆண் புள்ளிமானை அப் பகுதி மக்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
லால்குடி அருகே மருதூா் கிராமத்திற்குள் 2 வயது ஆண் புள்ளிமான் சுற்றித் திரிந்தது. இதைக் கண்ட அப் பகுதி மக்கள் அந்த மானை உயிருடன் பிடித்து, திருச்சி வனத்துறைக்குத் தகவல் கொடுத்ததின் பேரில், புள்ளம்பாடி வனவா் ஞானசம்பந்தம் மற்றும் வனவா்கள் மருதூருக்கு வந்து புள்ளி மானை பெற்று, லால்குடி அருகேயுள்ள தச்சன்குறிச்சி வனப் பகுதியில் விட்டனா்.