திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு உதவிடவும் ஆட்சியரகத்தில் 24 மணி நேர கரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டு அறையை 1077, 0431-2418995, 99523- 87108 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். கரோனா தொடா்பான தகவல்களை இந்த எண்களில் எப்போதும் தெரிவிக்கலாம். நோய் அறிகுறி கண்டவா்களை கையாளும் பொருட்டு அனைத்து விதப் பயிற்சியும் வழங்கப்பட்டு 24 மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவையும் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.