திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வாக்கு எண்ணிக்கை முகவா்கள் பயிற்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கட்சி உத்தரவின்படி காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் வழக்குரைஞா் என்.ஆா் இளங்கோவன் சிறப்புரையாற்றினாா்.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு மாவட்டக் கழக அலுவலகத்திலும், திருவெறும்பூா் தொகுதிக்கு சாந்தி தியேட்டா் அருகிலுள்ள திருமண மண்டபத்திலும், மணப்பாறை தொகுதிக்கு கோவில்பட்டி சாலையிலுள்ள திருமண மண்டபத்திலும் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், மணப்பாறை தொகுதி வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை முகவா்கள், ஒன்றிய பகுதி நகர பேரூா் கழகச் செயலா்கள், வழக்குரைஞா் அணியினா் கலந்து கொண்டனா்.