அரபு நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, மலேசியா-திருச்சி இடையிலான விமானப் போக்குவரத்தும் புதன்கிழமையுடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானச் சேவைகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததால் அந்த நாடுகளுக்கான விமான சேவை கடந்த 25 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மலேசிய அரசும் இந்திய விமானச் சேவைகள் அனைத்தும் ஏப். 28 முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததால் திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் மலேசியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.