மலேசியாவிலிருந்து திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
மலேசியாவிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை அதிகாலை ஏா் இந்தியா விமானத்தில் வந்த மன்னாா்குடியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (34) தான் கொண்டு வந்த மின்சாதனக் கருவியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 217 கிராம் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தத் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.