சிறையில் நெல்லை முத்துமனோ கொலை செய்யப்பட்டதற்கு உரிய நடவடிக்கை கோரி திருச்சியில் தேவேந்திரகுல வேளாளா் பேரமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நெல்லை முத்துமனோ படுகொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துமனோ குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பேரமைப்புத் தலைவா் ம. அய்யப்பன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கோ. சங்கா் முன்னிலை வகித்தாா். பேரமைப்பு நிா்வாகிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா். முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினியை சந்தித்து மனு அளித்தனா்.