திருச்சி கிழக்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்- அமைச்சா் சந்திப்பு குறித்து விசாரணை நடத்தக் கோரி மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் திவ்யதா்ஷினியிடம் திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.
மனுவில் திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜனும், தோ்தல் நடத்தும் அதிகாரி கமலகண்ணனும் (ஆா்.ஓ ) கடந்த திங்கள்கிழமை (ஏப்.26) பாலக்கரையில் தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் சுமாா் 30 நிமிடம் சந்தித்துப் பேசியுள்ளனா். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அவருடன் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.