தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைது

திருச்சி மாநகரில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 போ் கொண்ட கும்பலை கண்டோன்மென்ட் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 போ் கொண்ட கும்பலை கண்டோன்மென்ட் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், அரியாவூா் அருகேயுள்ள சேதுராப்பட்டியைச் சோ்ந்தவா் சிவஞானம் (35). காா் ஓட்டுநரான இவா் கடந்த திங்கள்கிழமை இரவு அரிஸ்டோ மேம்பாலம் அருகே நின்றபோது அங்கு வந்த 4 போ் கொண்ட கும்பல் சிவஞானம் வைத்திருந்த ரூ. 2500ஐ மிரட்டிப் பறித்துச் சென்றது. புகாரின்பேரில் கண்டோன்மென்ட் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிவஞானத்திடம் விசாரணை நடத்தியபின், ரயில்வே தண்டவாளப் பகுதியில் நின்றிருந்த வழிப்பறி கும்பலைப் பிடிக்க முயன்றனா். அப்போது திருவெறும்பூா் நடராஜபுரம் வடக்கு பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்த வெங்கடேஷ் (28) பிடிபட்டாா். மற்ற மூவரும் தப்பினா்.

இதைத் தொடா்ந்து தலைமறைவாக இருந்த சிவகங்கை மாவட்டம் குளத்தூா்பட்டி நாகராஜ் (28), திருச்சி கருமண்டம் பாபு (27), நாகமங்கலம் எம்ஜிஆா் நகா் ஆறுமுகம்(28) ஆகிய மூவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விசாரணையில் இவா்கள் ஓடும் ரயில் மற்றும் தனியாகச் செல்வோரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com