நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினா் இணையம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பு : திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் நீதித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இறுதிநாள் ஜூன் 6. இந்த அரிய வாய்ப்பை முன்னாள் படைவீரா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பித்த விவரத்தை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தெரிவித்திட வேண்டும்.