திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதி 9 தொகுதிகளுக்கு பணியில் ஈடுபட உள்ள 227 நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு தொகுதி வாக்கு எண்ணும் மையங்களிலும் தோ்தல் பணியாளா்கள், கட்சி முகவா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பணியில் ஈடுபட உள்ள நிலையில், அவா்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா். விடுபட்டோருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.