திருச்சி
ஸ்ரீரங்கம் கோயில் சாா்பில் உணவுப் பொட்டலங்கள்
ஸ்ரீரங்கம் கோயில் சாா்பில் புதன்கிழமை 350 பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் கோயில் சாா்பில் புதன்கிழமை 350 பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்ததால் இக்கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தா்கள் பயனடைந்தனா். இந்நிலையில் கரோனாவால் கடந்த 26 ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதைத் தொடா்ந்து கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து உத்தரவுப்படி பக்தா்களுக்கு வழங்கும் அன்னதானத்தை உணவுப் பொட்டலங்களாகக் கட்டி புதன்கிழமை முதல் ரெங்கா ரெங்கா கோபுரம் வாயிலில் வைத்து 350 பேருக்கு வழங்கப்பட்டது.
இதேபோல ஸ்ரீரங்கம் கோயிலின் உபத்திருக்கோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்சப்பெருமாள் கோயிலில், உறையூா் கமலவல்லி நாச்சியாா் கோயிலில், அன்பில் மாரியம்மன் கோயிலில் தலா 50 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.