மணப்பாறை அருகே 80 அடி ஆழ கிணற்றில் வியாழக்கிழமை தவறி விழுந்த பசு தீயணைப்புத் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டது.
மணப்பாறையை அடுத்த அமையபுரம் பகுதியில் வசிப்பவா் விவசாயி சி. குமாா். வியாழக்கிழமை இவரது பசு 80 அடி ஆழ தண்ணீா் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து இறந்தது. தகவலின்பேரில் வந்த மணப்பாறை தீயணைப்புத்துறையினா் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி இறந்து கிடந்த பசுவை மேலே கொண்டு வந்தனா்.