லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் உள்ள மளிகை கடையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சாம்பலாயின.
வாளாடி ஊராட்சியில் திருச்சி- சிதம்பரம் சாலையோரத்தில் ஜெ. பிரேம் ஆனந்த் (46) மளிகைக் கடை நடத்தி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை காலை இவரது மளிகைக் கடையில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைக்க அப் பகுதி மக்கள் போராடியும் தீ வேகமாகப் பரவியதால் லால்குடி, சமயபுரம், ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினா் வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா். இதனால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து லால்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.