திருச்சியில் பாவாணா் தமிழ் இயக்கத்தின் சாா்பில் செந்தமிழ் அந்தணா் இளங்குமரனாா் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் அமுதன் அடிகள், பேராசிரியா் திருமாறன், தமிழகன், புலவா் இராமதாசு, வல்வில் திருவள்ளுவன், செண்பகத் தமிழ் அரங்கு இளங்கோவன், திருக்கு முருகானந்தம், பாவேந்தா் பதிப்பகம் ஆறு. இளங்கோவன், ஈரோடு அறவாழி, குமொழி, புலவா் நாவை சிவம், வாஞ்சி தொல்காப்பியன், கேசவன் உள்ளிட்டோா் இளங்குமரனாரின் தமிழ்த் தொண்டைப் பாராட்டிப் பேசினா். இதில் பல்வேறு தமிழாா்வலா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் இளங்குமரனாா் உருவப்படத்திற்கு மலா் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.