மீண்டும் தொடங்கிய கரோனா பரிசோதனை

திருச்சியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னா், தென்னூா் உழவா் சந்தையில் கரோனா பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.
தென்னூா் உழவா் சந்தையில் நடந்த கரோனா பரிசோதனை.
தென்னூா் உழவா் சந்தையில் நடந்த கரோனா பரிசோதனை.

திருச்சியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னா், தென்னூா் உழவா் சந்தையில் கரோனா பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருச்சியிலும் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநகராட்சி சாா்பில் கரோனா பரிசோதனை முகாம்களை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி தென்னுாா் உழவா் சந்தைக்கு வந்த பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் மீண்டும் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com