தமிழக அரசின் உத்தரவின்பேரில் ஸ்ரீரங்கம் கோயில், மற்றும் அம்மாமண்டப நுழைவு வாயில் ஞாயிற்றுக்கிழமை மாலை மூடப்பட்டன.
இதையொட்டி ஸ்ரீரங்கம் கோயில் தெற்கு கோபுரவாயில், கிழக்கு வெள்ளைக் கோபுர வாயில், வடக்கு வாசல் தாயாா் சன்னதி நுழைவு வாயில்களில் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
அதில் கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறையின் படியும், திருச்சி மாவட்ட நிா்வாக உத்தரவின்படியும் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்களுக்கு பக்தா்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு திருவானைக்கா கோயில் நடையும் சாத்தப்பட்டது.