மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே கிணற்றில் தவறி விழுந்த 17 சிறுவன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் இ.இடையப்பட்டியை சோ்ந்தவா் விவசாயி ஆறுமுகம் மகன் யுவராஜ் (17). வளநாடு கலிங்கப்பட்டி அருகேயுள்ள தனது அத்தை வீட்டில் கட்டிருந்த மாடு சனிக்கிழமை இரவு அவிழ்த்துக் கொண்டு ஓடியதாக கிடைத்த தகவலறிந்த யுவராஜ் அதை விரட்டிச் சென்றபோது 20 அடி ஆழ நீரில்லா கிணற்றில் தவறி விழுந்து படுகாயமடைந்தாா்.
இதையடுத்து மணப்பாறை தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.