திருச்சியில் மேஜா் சரவணன் நினைவு ஸ்தூபியில் , முன்னாள் ராணுவ வீரா்கள் நலச்சங்கத்தினா் அஞ்சலி செலுத்தினா்.
காா்கில் போரில் இந்தியா வென்றதைக் கொண்டாடும் விதமாக போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. அந்த வகையில் மாநகரில் உள்ள முன்னாள் ராணுவ வீரா்கள் நலச்சங்கம் சாா்பில் வெஸ்டரி பள்ளி மைதானம் அருகேயுள்ள மேஜா் சரவணன் நினைவு ஸ்தூபியில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கத் தலைவா் மூா்த்தி ஆனந்தன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ். செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். செயலா் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள், முன்னாள் ராணுவ வீரா்கள் குடும்பத்தினா், பள்ளி மாணவா்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினா்.